Monday, November 28, 2011

டாக்டர் என்ன கடவுளா?

நீண்ட நாளாகிறது ஏதாவது எழுத வேண்டும் என்று தோன்றி. நீண்ட நாளாக நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்த டாக்டர்கள் உடனான எனது அனுபவத்தை இதோ  இங்கே தருகிறேன்.

பல முறை டாக்டர்கள் தங்களை கடவுளுக்கு மேலாகவே நினைத்து கொள்கின்றனர். எனது அனுபவத்தில் பல டாக்டர்கள் ஆன்மீகவாதிகளாக இருக்க பார்த்திருக்கிறேன். அதில் சில தீவிர பக்தியாளர்களும் உண்டு. அப்படி பட்ட  டாக்டரிடம் நான் பட்ட பாடு ......

எனது தாத்தா அவரது கடைசி காலத்தில் நினைவு இழந்த நிலையில் ஈரோட்டில் உள்ள அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். நேராக தீவிர சிகிச்சை பிரிவுக்கு கூட்டி சென்று பரிசோதனையை ஆரம்பித்தார்கள். பத்து நிமிடம் பொறுமையாக இருந்த நான் உள்ளே சென்று என்ன நடக்கிறது என்று பார்த்தேன். அங்கே டாக்டர்கள் எவரும் இல்லை. இரண்டு நர்சுகள் தான் தாத்தாவின் உடல் நிலையை பரிசோதித்து கொண்டு இருந்தார்கள். "டாக்டர் எப்ப வருவார்" என்று கேட்டேன். அவர் மாலை நேர பூஜையில் இருக்கிறார், வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்றனர்.  என்னடா இவர் சிறப்பு பூஜை நடத்துகிறாரா இல்லை மருத்துவமனை நடத்துகிறாரா என்கின்ற அளவுக்கு ஒரு வெறுப்பு. என்ன செய்வது, தாத்தா ஏற்கனவே இங்கு சிகிச்சை பெற்றவர் என்பதால் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு நிற்க வேண்டியதாயிற்று. 

இரண்டு மணி நேரம் ஆன பின் டாக்டர் தனது பரிவாரங்களுடன் ICU  அறைக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து நான் உள்ளே அழைக்கப்பட்டேன். அங்கே இருந்த டாக்டர் "உடல் நிலை கொஞ்சம் சீரியஸ் தான். என்னால் முடிந்த அளவு சிகிச்சை தருகிறேன்" என்றார். கேட்ட கேள்விகளுக்கு தொய்வில்லாமல் பதில் அளித்தார். அவரது அணுகு முறையும் பதில் அளித்த விதமும் எனது கோபத்தை தற்காலிகமாக மறக்கடிக்க செய்தது. 

நான்கு நாட்கள் கழித்து எனது தாத்தாவின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் வீட்டிற்கே அவரை அழைத்து வந்து விட்டோம். அடுத்த நாள் அவர் இறந்து விட்ட நிலையில் இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டி மறுபடியும் அந்த மருத்துவமனை செல்ல வேண்டி வந்தது. சரியாக எட்டு மணிக்கு அங்கு சென்று விட்டோம். அனால் நமது ஆன்மிக செம்மல் அப்பொழுது தான் இறைப்பணி ஆற்ற சென்று விட்டார் என அங்கே  சொல்ல, நொந்து போய்விட்டோம். எவ்வளவோ கெஞ்சி கேட்டும் போராடி பார்த்தும் சரியாக இரண்டு மணி நேரம் கழித்து தான் சாமி தரிசனம் காண முடிந்தது.

மருத்துவரின் ஆன்மீக பற்றை குறை சொல்லவில்லை, அனால் அவசர சிகிச்சை பிரிவு என்று ஒரு பிரிவை வைத்து கொண்டு இந்த அலட்சியம் ஏன் ? ஒரு மாற்று மருத்துவரை இருக்க சொல்லிவிட்டு செல்ல வேண்டியது தானே? இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கும் ஒரு மாற்று மருத்துவர் இருந்திருந்தால் எவ்வளுவு நன்றாக இருந்திருக்கும். 

நோயாளிகளுக்கு செய்யும் சேவையே கடவுளுக்கு செய்யும் சேவை என உணர்ந்தால் கடவுள் அருள் நிச்சயம் அவருக்கு உண்டு. தினமும் இரண்டு மணி நேரம் அவருக்கும் மிச்சம், காத்திருக்கும் நமக்கும் மிச்சம்.

மேலும் சில அனுபவங்களும் உண்டு. அது அடுத்த பதிவில் 

Tuesday, January 26, 2010

ராகு காலம் அஷ்டமி நவமி

எந்த நேரத்தில ஆரம்பிச்சோனோ தெரியல இப்படி ஆயிடுச்சே! இப்படி ஒருவர் ஒப்பாரி வைத்து கொண்டு இருக்க, "அதான் நான் முதலையே சொன்னேன். நல்ல நேரம் பார்த்து பண்ணனும்னு ! என் பேச்சை யாரவது கேட்டா தானே " என்று நாம் கேட்பது அன்றாட வாழ்வில் நாம் பழக்க பட்ட ஓன்று தான்.

பிரச்சனைகள் அதிகமாக அதிகமாக மனிதனின் மனம் எதை சொன்னாலும் நம்பிவிடும். அது போல தான் இந்த சமயமும் சடங்குகளும். நாம் பிறக்கும் பொழுது என்ன நேரத்தில் பிறக்கிறோம் என்று பார்த்து பிறப்பதில்லை. நாம் உணவு உண்ணும் பொது எந்த நேரத்தில் உண்ண வேண்டும் என்ற வரைமுறை இல்லை. ஒரு சினிமா சென்று பார்கையில் நல்ல நேரத்தில் தான் சென்று பார்க்க வேண்டும் என்று யாரும் யோசிப்பதில்லை. இப்படி வாழ்வில் நாம் தினமும் செய்யும் வேலைகளுக்கு ராகு காலம் எமகண்டம் இல்லை. ஆனால் வாழ்வில் நாம் முக்கிய முடிவு எடுக்கும் பொழுது நமக்குள் ஒரு பதற்றம். நாம் எடுக்கின்ற காரியம் நல்ல படி முடியவேண்டும் என்ற ஒரு ஆதங்கம். இந்த நேரத்தில் தான் நமக்கு அசாதாரண நம்பிக்கை உண்டாக்க ஒரு செய்கை தேவைப்படுகிறது. அந்த செய்கை தான் நல்ல நேரம் பார்ப்பது.

நல்ல நேரத்தில் ஒரு காரியம் தொடங்கி அது நடக்காவிட்டால் எப்படியும் நம்மை நாம் சமாதானம் பண்ணி கொள்ள தவறுவிதில்லை. அந்த சமாதனத்தை ஏன் முன்னமே ஒரு மாற்று திட்டமாக வைத்து கொள்ள கூடாது?

சில சமயங்களில் ராகு காலத்தில் வேலை தொடங்கிவிட்டோமே என்ற பதைபதைப்பில் நன்றாக சென்று கொண்டிருக்கும் காரியத்தை நழுவ
விட்டவர் பலர்.

அடுத்து ஒரு வீட்டு உபயோக பொருள் வாங்குவது என்றால் அஷ்டமி நவமி பார்த்து வாங்குகிறோம். நல்ல நேரத்தில் மட்டும் வாங்கிய ஒரு பொருள் ரிப்பேர் ஆகாமல் ஓட வேண்டும் என்றால், அனைத்து தொழிற்சாலைகளும் மூடு விழா காண வேண்டியது தான். அப்படி என்றால் அந்த தொழிற்சாலை அஷ்டமி நவமி அன்று தொடங்க பெற்று இருக்குமோ? நேரத்தின் மேல் வைக்கும் நம்பிக்கையை அந்த பொருளை கண்டு பிடித்தவன் மேல் வையுங்கள்.

வாரத்தில் சனி கிழமையன்று ஒரு பொருள் வாங்க கூடாது என்று ஒருவர் சொல்லியும் எனது வீட்டிற்கு வாஷிங் மெசினும் ப்ரிட்ஜும் வாங்கினேன்.அன்று அஷ்டமி தினமும் கூட. இருந்தாலும் என்ன தான் நடுக்கும் என்று வாங்கி வைத்தேன். ஐந்து வருடமாக அது ஒழுங்காக தான் ஓடி கொண்டிருக்கிறது.

விதண்டாவாதம் செய்வது எனது நோக்கமல்ல. உண்மையை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். அடுத்த முறை ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது நாட்காட்டியை தேடாதிர். உங்கள் மனதில் நம்பிக்கையை தேடுங்கள்.வெற்றி நிச்சயம் கிடைக்கும். வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

"நடக்கும் என்பார் நடக்காது
 நடக்காது என்பார் நடந்துவிடும்.
 கிடைக்கும் என்பார் கிடைக்காது
 கிடைக்காது என்பார் கிடைத்துவிடும்"

Thursday, January 14, 2010

சொகுசு வாழ்க்கை

உண்மையில் சொகுசு வாழ்வு வாழ்வது யார் என்று நீங்கள் எண்ணி பார்த்ததுண்டா?

அமெரிக்கரா? ஐரோபியரா? ஆஸ்த்ரேலியரா ? யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இந்தியர் என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

எப்படி இந்தியர்?
சொகுசு என்பதற்கு அர்த்தம் என்னவென்று எண்ணி பாருங்கள்? கஷ்ட்டபடாமல் உண்ண உணவோ, அல்லது விரும்பிகின்ற உடை அணிந்தோ அல்லது நம் மனம் போன போக்கிலே வாழும் வாழ்க்கையை தான் நாம் சொகுசு என்கிறோம்.

இன்று ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் ஒரு கலர் டிவி உள்ளது. அப்படி இல்லாவிடினும் அதை இலவசமாக அரசாங்கமே வழங்குகிறது. எந்த நாட்டிலாவது இப்படி ஒரு நடை முறை உள்ளதா என்று எண்ணி பாருங்கள்? ஆக நல்ல படி பொழுது போக்க ஒரு டிவி உள்ளது? அனால் இந்த டிவியை கண்டு பிடித்தது ஒரு இந்தியானா? இதை கண்டு பிடிக்க எந்த அளவு ஒரு மனிதன் எவ்வளவு உழைத்திருப்பான் என்று சிந்தித்து பாருங்கள்.

உலகமே தொழில் புரட்சியில் வளர்ந்துகொண்டு இருந்த நேரத்தில் , நமது முன்னோர்கள் சிற்பமும் கோவிலும் கட்டி கொண்டு இருந்தார்கள். எந்த ஒரு புது குடியிருப்பு ஒரு இடத்தில உருவாகும் போதும், மக்களக்கு வரும் எண்ணம் " அட ஒரு கோவில் இருந்தால் நன்றாக இருக்குமே! கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது!" என்பது தான். கோவில் கட்டி முடித்து விட்டாவது எதாவது ஊருக்கு நல்லது செய்வார்கள் என்று நினைத்தால், அடுத்து கும்பாபிசேகம் , மார்கழி பூஜை என்று அமர்க்கள படுத்துவார்கள். பிச்சைக்காரர்கள் உருவாகும் இடம் எதுவென்று பார்த்தால் அது கோவிலாக தான் இருக்கும். நான் கோவிலுக்கு வெளியில் பிச்சை எடுப்பவரை சொல்லவில்லை. கோவிலுக்குள்ளே பிச்சை எடுப்பவர் தான் அதிகம். நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று ஒரு பிச்சை, தொழில் லாபம் பெற வேண்டும் என்று ஒரு பிச்சை இப்படி பல விதம். நமது வாழ்வில் சொகுசு முதல் முறையாக எட்டி பார்ப்பது கோவில்களில்தான்.
மற்ற நாடுகளில் நிற்பதற்கே நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கும் நேரத்தில் நம்மவர்கள் பாலபிசேகமும் நெய் அபிசேகமும் பார்த்து கொண்டு இருகிறார்கள். தோல்வி ஏற்படும் பொது எல்லாம் போராட்ட குணம் குன்றி கடவுளிடம் சரணடைந்து விடவே பலர் விரும்புகின்றர். "எல்லாம் அவன் பார்த்துக்குவான்" . இந்த சொல்லில் எத்தனை சொகுசு என்று கணக்கிட்டு பாருங்கள்.

கடவுளையும் கலையையும் விடுங்கள். காதலையும் சொகுசாசக செய்வது தான் நம் தனி சிறப்பு. அமெரிக்கா போன்ற நாடுகளில் 16 வயதுக்கு மேல் ஒரு துணையை கண்டறிந்தே ஆக வேண்டும். சாகசங்களும் நவரசங்குளும் பல புரிந்து எதிர் பாலினரை ஈர்க்க வேண்டும். ஆனால் நம் நிலையை பாருங்கள். அழகாக அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ சென்று எனக்கு நல்ல படித்த நல்ல அழகான ஒரு பெண் வேண்டும் என்று சொல்லிவிட்டு அவரவர் அவர் வேலையை பார்த்து கொண்டு இருக்கலாம். பத்து பெண்களை பார்த்து ஒரு பெண்ணை தேர்ந்து எடுக்கும் சொகுசு நமக்கு மட்டும் தான் உள்ளது.

அடுத்து அறிவியல். கணிப்பொறி செல்போன் என்று யாரோ கண்டு பிடித்து கொண்டு இருக்க, நாம் இவற்றை நன்றாக உபயோகிக்கிறோம். இது போதாது என்று ஆயுத பூஜை அன்று பட்டை போட்டு வணங்க வேறு செய்கிறோம். பேருந்தில் சொகுசாக பயணம் செய்யும் முன்னர் முனியப்பனக்கு நான்கு எழுமிச்சை பழங்கள் அன்பளிப்பு வேறு. அடுத்தவர்கள் கண்டு பிடித்ததை பாடத்தில் படித்து கொண்டு கிளி பிள்ளை போல நம் வேலையில் அப்படியே செய்கிறோம்.கூகிள் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஏன் நம் நாட்டில் இருந்து வரவில்லை?  இன்போசிஸ் விப்ரோ போன்று மக்கள் சமுத்திரத்தை வெய்து கொண்டு குமாஸ்தா வேலை தான் செய்து கொண்டு இருக்கிறோம்.

இப்படி பல வழிகளிலும் சொகுசாக யார் வாழ்கிறார் என்று எண்ணி பாருங்கள். இந்தியர் என்று பதில் தான் உங்களிடமும் வருகிறாதா?

"
சிரித்து வாழ வேண்டும் 
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே 
உழைத்து வாழ வேண்டும் 
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதேஎன்ற எம்ஜியார் பாடலின் அர்த்தத்தை தேடுங்கள்.

என்னை பற்றி


சில நேரங்களில் சில கேள்விகள்
என்னுள் மின்னி மறையும்
அதை சிலரிடம் கேட்டு வைக்க 
என் எண்ணம் விரையும் 
என் மனதில் மட்டும் தங்கி விட்டால் 
என்ன பயனாம் 
அதனால் இங்கு இட்டு வைத்தேன் 
உங்கள் கண் படிய
என் கேள்விகளில் அர்த்தம் இருந்தால்
பதிலை தேடுங்கள்
வெறும் பேத்தல்  என்று நினைத்து விட்டால் 
சிரித்து கொள்ளுங்கள்.

கூலி?

இப்பொழுதெல்லாம் கூலிக்கு ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டம் ஆகிவிட்டது என்ற புலம்பல் மிக அதிகாமாகி வருகிறது.
கூலிக்கு வருபவன் இருபது ஆயிரம் முன் பணம் கொடுத்தால் தான் வருகிறான். தொழில் செய்வதே இப்பொழுதெல்லாம் கஷ்டம் ஆகி விட்டது என்ற புலம்பல் வேறு. இதை போன்று புலம்புவர்களில் நீங்களும் ஒருவரா? இனி நான் கேட்க போகும் கேள்விகள் உங்களக்குகாக தான்.

கூலி என்றால் கடைசி வரை ஏவல் வேலைகளை செய்து விட்டு சாக வேண்டியது தானா? அவர்களுக்கும் உங்களை போன்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாதா?
தான் படிக்காவிட்டாலும் தன் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற நினைப்பு ஒரு கூலிக்கு இருக்க கூடாதா?

நூல் விலை சந்தையில் ஏறி விட்டால் அது உங்களை பாதிக்கிறது என்கிறீர்கள். உங்கள் லாபத்தில் கொஞ்சம் குறைகிறது என்கிறீர்கள்? நூல் விலை குறையும் பட்சத்தில் என்றாவது கூலியை உயர்த்த வேன்றும் என்ற எண்ணம் வந்துள்ளதா உங்களக்கு?

தீபாவளி பொங்கல் போன்ற விழாக்களின் பொழுது வெறும் ஐநூறு அல்லது ஆயிரம் மட்டும் போனசாக தரும் ஏராளமான கடைகளை நான் பார்த்து இருக்கிறேன் உங்கள் வீட்டுக்கு ஐநூறு ஆயிரம் ருபாய் பட்டாசு வாங்குவதற்கே செலவாகும் பொழுது, கூலி தான் பெற்ற ஐநூறு ரூபாயில் தன் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்குவானா அல்லது மனைவிக்கு ஒரு நல்ல புடவை வாங்கி கொடுக்க தான் முடியுமா? இதில் முதலாளிகள் கூறும் இன்னொரு வியாக்கானம் " அது தான் வருடம் முழதும் உன் வேலைக்கு உத்திரவாதம் தருகிறேன். அப்புறம் எதற்கு தனியாக போனஸ் " என்பது.

இங்கு பல கடைகள் தங்கள் லாபத்தை கணக்கிடுவதே கூலி வயிற்றில் அடித்து தான். கூலி பத்து பைசா ஏற்றினால் நமக்கு மாதம் ஆயிரம் ருபாய் நஷ்டம் என்ற எண்ணம் தான் எப்பொழுதும் மேலோங்கி நிற்கும்.

அய்யா முதலாளிகளா ! இன்னும் எத்தனை காலம் தான் கூலிகளை ஏமாற்றி கொண்டு இருப்பீர்கள்? கூலிகள் இன்று விழித்தெழ தொடங்கி இருகிறார்கள். நீங்கள் எப்படி கடன் வாங்கியாவது கடைக்கு முதல் சேர்க்கிறீர்கள்? அது போல் கூலிகள் கடன் வாங்கியாவது தன் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். இது அவர்கள் எதிர் காலத்தில் போடும் முதல் போல.

உங்கள் போக்கில் இனியும் மாற்றும் இல்லாவிடில் , இன்று கிடைக்கும் ஒன்று இரண்டு ஆட்கள் கூட வேறு வழியை பார்த்து சென்று விடுவார்கள். அவர்களை உங்கள் பங்குதாரர் போல் நடத்துங்கள். அவர்கள் ஈடுபாடுடன் வேலை செய்தால் நீங்களும் லாபம் அடையலாம் அவர்களும் தம் வாழ்வில் முன்னேறலாம்.

"இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும்
பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்" என்ற எம்ஜியார் பாடலை மனதில் நினையுங்கள்